Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கடத்தூரில் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

Top Post Ad

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக கடத்தூர் பேரூர் கழகத்தின் சார்பாக 15 வார்டுகளில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிறைவாக கடத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைதி ஊர்வலம் கடத்தூர் ஊர் முழுவதும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கடத்தூர் பேரூர் கழக செயலாளர் K.T.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார் .கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ் கு.மணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் தீ.முனிராஜ்  பேரூர் கழக அவைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர பொருளாளர் நடராஜன் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து கடத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் K.ஜெகநாதன் முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு R.சிவப்பிரகாசம் ஆகியோரும் உடனிருந்தனர். ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies