Type Here to Get Search Results !

மொரப்பூர் தனியார் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மொரப்பூர் காவல் நிலையம் சார்பாக கஞ்சா மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் முதல்வர் திரு.கே.ராமு தலைமை தாங்கினார் தாளாளர் திரு.சி.திலகரசன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பெனாசீர் பாத்திமா அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவ மாணவியர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies