தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேளாரஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் மகேந்திரன் அவர்களால் நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பரப்பு 41.35 ஏக்கர்.சென்ட் நிலங்கள் ரூபாய்.2,49,400/-க்கு 20 விவசாயிகளால் ஏலம் எடுக்கப்பட்டது மற்றும் அதே கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் வேடியப்பன் அவர்களால் நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பரப்பு 11.20 ஏக்கர் சென்ட் நிலங்கள் ரூபாய்.81,800/- க்கு 7 விவசாயிகளால் ஏலம் எடுக்கப்பட்டது. 01.08.2022 பசலி 1432 -க்கு முதன்முறை பொது ஏலம் விட இந்து சமய அறநிலையத்துறை தருமபுரி உதவி ஆணையர் உதயகுமார் அவர்கள் உத்தரவின்படி பாலக்கோடு ஆய்வாளர் ததுரை கண்காணிப்பில், பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு.தவமணி மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டு இரண்டு திருக்கோயில்களுக்கும் ரூபாய்.3,31,200/- ஆண்டுக்கு வருவாய் ஈட்டப்பட்டது.
இதுவரை பாலக்கோடு ஆய்வர் திரு.துரை தலைமையில் 17 திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 420.50 ஏக்கர்.சென்ட் நிலங்கள் முதன் முறை பொது ஏலம் வைக்கப்பட்டதில் ஆண்டுக்கு ரூபாய்.12,92,400/- இந்து சமய அறநிலையத்துறைக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக