மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வார விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஆகஸ்ட், 2022

மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வார விழா.

தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வார விழா நல்லம்பள்ளி வட்டாரம் தேவரசம்பட்டி சமுதாய கூடத்தில் காலை 11 மாலை அளவில் நடைபெற்றது இதில் திருமதி ஜான்சி ராணி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் வரவேற்ப்புரையாற்றினார்.  

வாசுதேவன் வட்டார மருத்துவ அலுவலர்,  பெருமாள் நல்லம்பள்ளி வட்டாட்சியர், முருகன் கவுன்சிலர் அதியமான்கோட்டை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர், விழாவில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர இளம்பெண்கள் 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சீம்பாலின் அவசியம், தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கொழுகொழு குழந்தைப் போட்டி, செயல்முறை விளக்கப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திட்ட விளக்க கண்காட்சி ஊட்டச்சத்து உணவுகள், காய்கறிகள், பழங்கள் , கீரைகள் மூலம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டது.

இவ்விழாவினை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த செல்வம் ஆனந்தன் மேற்பார்வையாளர்கள் மலர்விழி, தமிழ்ச்செல்வி, ஜெயா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியாக சித்ரா குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad