கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருவதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது நீ்வரத்து குறைந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கின்றன.
இந்த நீர்வரத்து அதிகரிப்பு அதிகரிப்பு காரணமாக 28 வது நாளாக மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது மேலும் கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்தே நீர்வரத்து அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக