தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இன்று இறுதி போட்டிகள் நடைபெற்றது, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார், மாவட்ட இறகுப்பந்து சங்க செயலாளர் தனசேகர், மாவட்ட இறகுப்பந்து பொருளாளர் கோபி, மாவட்ட இறகுப்பந்து துணை செயலாளர் ரங்காதுரை, மாவட்ட இறகுப்பந்து துணைத்தலைவர் சந்திரகுமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இறகுபந்து பயிற்சியாளர் சந்தோஷ் வரவேற்று பேசினார், இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற தொல்காப்பியன், ஆண்கள் இரட்டையர் பிரிவில் மதன், தொல்காப்பியன், மற்றொரு இரட்டையர் பிரிவில் மனோஜ்குமார், சந்திரகுமார் மற்றும் வெற்றி பெற்ற வீரர்கள்-மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கலைச்செல்வன் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
