Type Here to Get Search Results !

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர்; சிரமத்திற்கு உள்ளாகும் மாணவர்கள்.

பென்னாகரம் ஒன்றியம் மாதேஹள்ளி ஊராட்சி பிள்ளப்பநாயக்கனஹள்ளி துவக்கப்பள்ளி முன் மழைக்காலங்களில் மழை நீர் வெளியில் எங்கும் செல்லாமல் தேங்கி நின்று விடுகிறது இதனால் பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் இதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்றம்.

பென்னாகரம் ஒன்றியம் மாதேஹள்ளி ஊராட்சி பிள்ளப்பநாயக்கனஹள்ளி துவக்கப்பள்ளி ஊராட்சி ஆன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர், இப்பள்ளி அமைந்துள்ள நிலத்தை, சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த சுற்றுச்சுவர் பணியை இப்பகுதியை சார்ந்த பெருமாள் என்பவரின் மகன் சின்னசாமி தடுத்துவருக்கிறார். மேலும் பள்ளி சுற்றி விவசாய நிலங்கள் உள்ளதால் விஷாஜந்துக்கள் அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் வருவது வாடிக்கையாகி வருக்கிறது.

மேலும் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது, காரணம் இப்பள்ளியை சுற்றி உள்ள விவசாய நிலங்கள், மற்றும் சுற்றுச்சுவர் இல்லாதது தான் காரணம் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பொதுமக்கள் சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டது, எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies