Type Here to Get Search Results !

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 731 மது பாட்டில்கள் பறிமுதல். 2 பெண்கள் கைது.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 731 மது பாட்டில்கள் பறிமுதல். 2 பெண்கள் கைது.

அரூர்  டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா உத்தரவின் பேரில் பாப்பிரெட்டிப் பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பட்டியில் வீட்டில் மறைத்து வைத்து சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்ததாக ராணி (வயது 45) கந்தாயி (வயது 62) என்ற இரு பெண்களை அ.பள்ளிப் பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் அவர்களின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  சுமார் ரூ 1 லட்சம் மதிப்புள்ள 731 பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies