Type Here to Get Search Results !

காவிரி ஆற்றில் நீர்வரத்து ஐம்பதாயிரம் கன அடியில் இருந்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஐம்பதாயிரம் கன அடியில் இருந்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 28,378  கன அடி நீர் காவிரி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. 

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் இன்று காலை மேலும் கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டு வினாடிக்கு 34,723 கனஅடியாக வெளியேற்றப்பட்டன. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நேரத்தில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்த நீர்வரத்து அதிகரிப்பால்  பிரதான அருவி,  சினி ஃபால்ஸ் மெயின் அருவி ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. 

காவிரி வனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என  சுற்றுலா பயணிகளுக்கு பரிசலில் செல்ல இரண்டாவது நாளாக தடை நீடித்து வருகிறது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மெயின் அருவி குளியலறை சீனி அருவி ஆகிய அருவிகளில் சேதம் ஏற்பட்டது சீருமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றதால் குளிப்பதற்கு தொடர்ந்து 48 வது நாளாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை நீடித்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies