ஏரியூர் அருகே அடுத்த கிராமகொண்டஹள்ளி ஊராட்சிக்குபட்ட மலையனூர் கிராமத்தை குமார், இவரின் மகள் ஈரோட்டில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார், கடந்த ஒரு ஆண்டு தனது சொந்த ஊருக்கு குமாரின் மகள் வந்துள்ளார்.
அப்போது பாட்டி உள்ளிட்ட ஆறு பேர் குமாரின் மகளை கட்டாயப்படுத்தி ஏரியூர் அடுத்த மஞ்சார்ஹள்ளி - ஏர்கூல்பட்டியை சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்து அந்த சிறுமி தற்போது ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பெரி விசாரணை செய்த ஏரியூர் போலீசார் சிறுமியின் பாட்டி மற்றும் கணவர் உள்ளிட்ட ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த சிறுமியின் பாட்டி உட்பட ஆறு பேரும் தலைமறைவாகிவிட்டனர், இச்சம்பவம் ஏரியூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


