Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் குட்கா கடத்தியவர் கைது; மோட்டார் சைக்கிள் மற்றும் 30 கிலோ குட்கா பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் துணை சூப்பிரண்ட்டு இமயவரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் நேற்று பருவதனஅள்ளி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது பென்னாகரம் நோக்கி மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.போலீசார் மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் குட்கா கடத்தி வந்தவர் நல்லம்பள்ளி அருகே பண்டஅள்ளியை சேர்ந்த தேவராஜ் மகன் மயில் முருகன் வயது 36 என்பது தெரியவந்தது. 

பட்டதாரியான மயில் முருகனை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து 30 கிலோ குட்கா போதை பொருளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies