சாலை மறியல் பேச்சுவார்த்தை நடத்த வந்த எம்எல்ஏ உடன் வாக்குவாதம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ், பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (21), நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் நிலையில் ஏரியூர், பென்னாகரம், தர்மபுரி என மருத்துவமனைகளுக்கெ அலைக்கழிக்கப் பட்டதன் காரணமாக சிகிச்சைக்கு தாமதமானது, தொடர்ந்து பரமேஸ்வரி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் தற்போது கர்ப்பிணி உயிரிழந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இறந்த கர்ப்பிணியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர், பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், 2 மணி நேர போராட்டம் எம்எல்ஏ பேச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

