Type Here to Get Search Results !

நீர்வரத்து அதிகரிப்பு : ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை.

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் நேற்று இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 18,256 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது மேலும் அணையின் நீரின் அளவு அதிகரித்து வந்ததன் காரணமாக வினாடிக்கு 23 ஆயிரத்து 511 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டன. 

கர்நாடகா அணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த உபரி நீர் இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில்  நேற்று 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று நண்பகல் நேரத்திற்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி சுமார் 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும்,  மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் இன்று (10.07.2022)  முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ,  ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ இன்றிலிருந்து (10.07.2022 ஞாயிற்றுக்கிழமை) மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884