சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 2807.2022 முதல் 1008.2022 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடைபெறுவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக "நம்ம செஸ் நம்ம பெருமை" குறித்து தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இன்று (2207.2022) மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ரங்கோலி கோலங்களின் மூலம் செஸ் மாதிரி சின்னங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று செஸ் மாதிரி சின்னங்களை ரங்கோலி கோலங்களில் வரைந்தனர். இந்த ரங்கோலி கோலங்களை திட்ட இயக்குநர் (பொ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை / திட்ட இயக்குநர், மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திரு. பிரபு அவர்கள் நேரில் பார்வையிட்டு. இக்கோலங்களை வரைந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே. சாந்தி உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

