பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சமூக நீதிக் காவலர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பென்னாகரம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.பி பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நகர செயலாளர் ஜீவா, நகர தலைவர் சந்தோஷ், முன்னாள் நகர செயலாளர் மடம்ஆறுமுகம் மாவட்ட துணைத் தலைவர் நீர்குந்திமாது, கிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் கணேசன் கிளைத் தலைவர் மணி பொருளாளர் மணி, மகளிர் அணி தலைவி அமுதா, செம்பாயி, இந்திரா நகர் கிளை தலைவர் தங்கமணி மாவட்ட இணை செயலாளர் ஊடகப்பிரிவு அன்பு பென்னாகரம் நாகமரை ரோடு கிளைச் செயலாளர் பவுன்ராஜ் , மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜிம் வேலன், பொச்சாரம்பட்டி சதீஷ், செந்தில், இந்திரா நகர் சக்தி, சக்கரவர்த்தி , கோபாலகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணாபுரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

