Type Here to Get Search Results !

தொப்பூர் அருகே ஈசல்பட்டியில் பண்ணை குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த ஈசல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார். இவருக்கு மூன்று குழந்தைகள் மஞ்சுநாதன்(8), அனுப்பிரியா(6), திவ்யதர்ஷினி (2). இவர் கர்நாடக மாநிலத்தில் கூலி வேலை செய்கிறார்.இதில் மஞ்சுநாதன் என்ற சிறுவன் ஈசல்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

சம்பவம் நடந்த அன்று மஞ்சுநாதன் மற்றும் அவரின் தங்கைகள் ஆகிய 3 பேரும் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அருகிலுள்ள பெருமாள் என்பவரின் நிலத்தில் உள்ள குட்டையில் விளையாடி உள்ளனர். 

இதில் ஆழப்பகுதிக்குச் சென்ற மஞ்சுநாதன் நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies