இதில் ஆத்திரமடைந்த கரியராமன், தனது வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து, தனது மகனை சுட்டார். சுதாரித்துக்கொண்ட ஏழுமலை குனிந்துக் கொண்டதால் துப்பாக்கி குண்டுகள் சுவற்றில்பட்டு அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களான ரவி (வயது 13), சாரதி (வயது 12), பிரபாத்(வயது 11), திருமலைவாசன்(வயது 16), அனிதா(வயது 13) ஆகிய ஐந்து சிறுவர்கள் மீது பால்ஸ் குண்டுபாய்ந்தது, இதில் ஐந்து சிறுவர்களின் கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட கிராம மக்கள் சிறுவர்களை மீட்டு சித்தேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 5 சிறுவர்களையும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவர்களின் கை மற்றும் தோள்பட்டையில் இருந்த குண்டுகளை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அகற்றினர். மேலும் துப்பாக்கி குண்டுகள் நேரடியாக பாயாததால் சிறுவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது, தற்பொழுது சிறுவர்கள் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிபோதையில் நாட்டு துப்பாக்கியால் சுட்ட கரியராமனை அரூர் காவல் துறையினர் கைது செய்து அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

.jpg)