Type Here to Get Search Results !

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் 2பேர் சம்பவ இடத்திலேயே பலி

Sample image, image source : google.

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம்  மீது கார் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் 2பேர் சம்பவ இடத்திலேயே பலி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நல்லாம்பட்டி பிரிவு ரோட்டில் இரு சக்கரம் வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் 2பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளியை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மகன் ரத்தினம் வயது 48. இவர் பென்னாகரம் மின்வாரியத்தில் வருவாய் ஆய்வாளராக வேலை செய்து வந்தார். அதேபோல் மஞ்சநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் சதானந்தன் வயசு 56. இவரும் பென்னாகரம் மின்வாரியத்தில் வருவாய் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று இவர்கள்  இருவரும் அலுவல் காரணமாக தர்மபுரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் பணியை முடித்துவிட்டு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பென்னாகரம் நோக்கி வந்தனர் . அப்போது நல்லாம்பட்டி பிரிவு ரோட்டின் அருகே ஒகேனக்கலில் இருந்து  தர்மபுரி நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட ரத்தினம், சதானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்கள் சிதறி பலியாயினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பென்னாகரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பென்னாகரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் மின் ஊழியர்கள் 2பேர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884