Type Here to Get Search Results !

புதிய மின்னணு குடும்ப அட்டை அரசு இ-சேவை மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுமக்கள் யாருடைய உதவியுமின்றி, தங்களுடைய கைப்பேசி வாயிலாகவும் பதிவேற்றம் செய்துகொள்ளும் பொருட்டு (www.tnpds.gov.in) இலவசமாக இயங்கி வருகிறது. 

தருமபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்களின் மனுக்கள் ஒருவார காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் Public Portal எடுக்கப்பட்டுள்ளது. தற்போது "அரசு இ-சேவை மையங்களிலேயே" உரிய ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டைகள் (Smart Cards) வேண்டி இணயதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு கட்டணம் ரூ.60/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / முகவரி மாற்றம் / தொலைபேசி எண் மாற்றம் / ஆதார் எண் சேர்த்தல் / நகல் அட்டை கோருதல் போன்ற பணிகளுக்கு இணையத்தில் பதிவு செய்ய தலா ரூ.30/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள் மேற்கொண்டு தகவல்கள் தேவைப்படின், அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்

தருமபுரி 9445000217, 

பென்னாகரம் 9445000218, 

பாலக்கோடு 9445000219, 

அரூர் 9445000220, 

பாப்பிரெட்டிப்பட்டி -9445000221,

காரிமங்கலம் 9445796431, 

நல்லம்பள்ளி - 9445796432. 

குடும்ப அட்டைகள் தொடர்பாக தனியார் இணையதள சேவை மையங்கள் (CSC) மற்றும் இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் தங்களின் கோரிக்கை குறித்து அலுவலர்களை தனக்கு தெரியும் பணிகளை நான் முடித்து தருகின்றேன் என்பவருடைய விபரங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் "1077". 04342 233299 -ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies