தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.6.72 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பேட்டரி கார் இயக்கத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

