Type Here to Get Search Results !

ஆபத்தை விளைவிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் பேரி காட் அமைப்பு.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறவடை மற்றும் தேவர்ஊத்துபள்ளம் செல்வதற்கான வழியில் ஜங்சன் பகுதி உள்ளது. இப்பகுதியின் அருகிலேயே சுமார் 300 மீட்டர் தொலைவில் அரசு மதுபான கடை இருப்பதினால் அடிக்கடி இந்த ஜங்சன் பகுதியில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். 

நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் இந்த ஜங்சன் பகுதியில் தான் அதிகளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போதெல்லாம் இப்பகுதிகளில் காவல்துறை சார்பிலோ அல்லது சாலை பராமரிப்பு நிறுவனம் சார்பிலோ பேரி காட் அமைக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் தொடர்ந்து பல வருடங்களாக இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் அப்பகுதியில்  தனியார் திருமண மண்டபம் ஒன்று திறப்பு விழா நிகழ்ச்சிநடை பெற்றதால்திடீரென அதற்காக திருமண மண்டப ஸ்பான்சர் மூலம் புறவடை பகுதி பிரிவு சாலையில் பேரி காட்கள் அமைக்கப்பட்டன. 

தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.  அதனைத் தவிர்த்துவிட்டு தனி நபருக்காக அவர்களை திருப்திப் படுத்துவ தற்காக காட்டும் அக்கறையை, தடுப்பு நடவடிக்கை களிலும் காட்ட வேண்டுமென பொதுமக்க ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கி ன்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies