Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

'இலக்கிய பார்வையில் விவசாய முதல் பாலினம் வரை,' என்ற தலைப்பில் கருத்தரங்கம் .

தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆங்கிலத்துறை சார்பாக என்லிட்ரஷ்யா லிட்ரரி அசோஷியேஷன் மூலமாக 'இலக்கிய பார்வையில் விவசாய முதல் பாலினம் வரை,' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதில் விருதுநகர் VHNSN கல்லூரியைச் சார்ந்த ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ராமநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இவர் தனது உரையில் இன்றைய காலகட்டத்தில் சபால்ட்டன் ஸ்டடீஸ் என்ற இலக்கிய அமைப்பு எவ்வாறு கருத்தாழம் கொள்ளப்படுகிறது மற்றும் நடைமுறை வாழ்வில் இதற்கான முக்கியத்துவம் எவ்வாறு தரப்படுகிறது என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

முன்னதாக பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். 

தொடர்ந்து ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் சி கோவிந்தராஜ் அவர்கள் விழா துவக்க உரையாற்றினார். உனக்காக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவன் பாரதமூர்த்தி வரவேற்றார். 

செல்வன் செந்தமிழன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இறுதியாக இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி செல்வி. ஜெசிகா நன்றியுரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884