Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மணியகாரன்கொட்டாய் ஸ்ரீமுத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக  பெருவிழா விமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விழா நேற்று  கணபதி பூஜையுடன்தொடங்கியது.  இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹநிதி நடந்தது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை யாக பண்டிதர்கள் மற்றும் ஊர் கவுண்டர்கள்  தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். 

பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து    ஶ்ரீமுத்து மாரியம்மன் சுவாமிக்கு  பல்வேறு திரவியங்கள்,  பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, ஸ்ரீ முத்து மாரியம்மன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  காலை முதல்  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள்,  விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884