இதில் தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர் குறிப்பாக காரிமங்கலத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவ கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், சிந்தல்பாடி, இராமியணஹள்ளி, ஆகிய அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்
சங்கத்தின் சார்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- பணி நிரந்தரம்,
- கொரானா உதவி தொகைவழங்க வேண்டும்,
- சம்பள உயர்வு,
- பணி பாதுகாப்பு,
- பணி சீருடை,
ஆகியவற்றை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் சார்பாக AITUC அமைப்பின் தர்மபுரி மாவட்ட தலைவர் எம்.மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் கே .மணி, மாவட்ட துணைத்தலைவர் ஆர். சுதர்சனம், மாவட்ட தலைவர் உ.ப. சங்கம் என் மனோகரன், தர்மபுரி மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தின் செயலாளர் நா. சின்னமணி, பொருளாளர் சின்னப்பையன், ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

.jpeg)