தீர்த்தமலைக்கு குறுக்குச்சாலை என்பதால் தினந்தோறும் பைக், காரிலும் பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனிப்பட்ட சிலரது சொந்த பிரச்சனை காரணமாக சாலையின் நடுவே கல்லும், முள்ளும் போட்டு சாலையை மறித்து உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. விவசாய பொருட்களை எடுத்து செல்ல முடியவில்லை, 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு குழந்தைகள் சிரமப்பட்டனர்.
தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் குழந்தைகள் படித்து வருகின்றனர் வரும் திங்கட்கிழமை பள்ளி திறக்க உள்ள நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்தாள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் தொடர்ந்து சிரமம் ஏற்படும்.தீர்த்தமலைக்கு செல்லும் இந்த குறுக்குச் சாலையில் தினந்தோறும் காரில் வந்து ஏமாற்றத்துடன் பலர் திரும்பி செல்கின்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட வரும் அதிகாரிகள் பார்வையிட்டு திரும்பிச் செல்வது எங்களுக்கு கவலையாக உள்ளது எனவே அரசு உடனடியாக சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

