அரூர் அடுத்த நரிபள்ளி மின் வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக தமிழ் நீதி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனார். இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நரிப்பள்ளி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு உதவி செயற் பொறியாளர் ஆக பணியாற்றி வந்த தமிழ்நிதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மீது அக்கறை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
தற்போது அவரை பணியிட மாற்றம் செய்துள்ளனர் எனவே அவரை மீண்டும் நரிபள்ளி அலுவலகத்தில் பணியை தொடர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

