Type Here to Get Search Results !

அரூர் காப்புக் காட்டில் மான்களை வேட்டையாடியவர் வனத்துறையினரால் கைது.

தர்மபுரி மாவட்டம் அரூர் காப்புக்காடு வனப்பகுதியில்  சட்டவிரோதமாக நுழைந்து இரண்டு  மான்களை வேட்டையாடி மான் கறிகளை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக இன்று  மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரக அலுவலர் உத்தரவின்  பேரில் வாதாப்பட்டி பிரிவு வானவர் யாசின் மற்றும் வனத்துறையினர் உடன் மொரப்பூர்  சந்தை மேடு பகுதியில் வனத்துறையினர் வாகன தணிக்கை செய்தனர் இதையடுத்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உர மூட்டையில் மான்கறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வனத் துறையினர் நடத்திய விசாரணையில் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு மான்களை  வேட்டையாடி மான் கறியை விற்க முயன்ற எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது இதையடுத்து சக்திவேலை பிடித்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடுவின் அறிவுறையின் படி அரூர் குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று  சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் இரண்டு மான்களை  வேட்டையாட பயன்படுத்திய கத்தி கட்டைகள் மான்தோல் மற்றும் 20 கிலோ எடையுள்ள மான்கறி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies