Type Here to Get Search Results !

கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளபடி, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு 03.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

கல்லூரி கல்வி இணை இயக்குநர் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies