Type Here to Get Search Results !

மாவட்டத்தில் 57 கிராம ஊராட்சிகளில் 07.06.2022 அன்று அனைத்து துறைகள் மூலம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 07.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 57 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 

தருமபுரி வட்டாரம் இலக்கியம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகாரணஹள்ளி, முக்கள்நாயக்கனஹள்ளி, கொண்டம்பட்டி, செட்டிக்கரை, நாய்க்கனஹள்ளி, நூலஹள்ளி மற்றும் சோகத்தூர் கிராம ஊராட்சிகளிலும், 

நல்லம்பள்ளி வட்டாரம் அதியமான்கோட்டை, ஏலகிரி, பாளையம்புதூர், மானிதஹள்ளி, ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம் மற்றும் தொப்பூர் கிராம ஊராட்சிகளிலும், 

காரிமங்கலம் வட்டாரம்  ஜிட்டான்டஹள்ளி, அடிலம், பைசுஹள்ளி, பண்டாரஹள்ளி, திண்டல், பெரியாம்பட்டி, பிக்கனஹள்ளி, இண்டமங்கலம் மற்றும் ஜக்கசமுத்திரம் கிராம ஊராட்சிகளிலும், 

பாலக்கோடு வட்டாரம்  பெல்லாரஹள்ளி, ஜர்தலாவ், கும்மனூர், பஞ்சப்பள்ளி, ஏ.மல்லாபுரம், கம்மாலப்பட்டி மற்றும் எர்ரனஹள்ளி கிராம ஊராட்சிகளிலும், 

பென்னாகரம் வட்டாரம்  வட்டுவனஹள்ளி, பருவதனஹள்ளி, பிளியனூர் சின்னம்பள்ளி மற்றும் மஞ்சநாய்க்கனஹள்ளி கிராம ஊராட்சிகளிலும், 

ஏரியூர் வட்டாரம்  நாகமரை, தொன்னகுட்டஹள்ளி மற்றும் பந்தரஹள்ளி கிராம ஊராட்சிகளிலும், அரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மோபிரிப்பட்டி, வேடகட்டமடவு, கொங்கவேம்பு, அக்ரஹாரம் மற்றும் செல்லம்பட்டி கிராம ஊராட்சிகளிலும், 

மொரப்பூர் வட்டாரம்  கெலவள்ளி, இருமத்தூர், கொங்காரப்பட்டி, தாசரஹள்ளி மற்றும் வகுரப்பம்பட்டி கிராம ஊராட்சிகளிலும், 

கடத்தூர் வட்டாரம் தென்கரைகோட்டை, கேத்துரெட்டிப்பட்டி, ஒப்பிலிநாய்க்கனஹள்ளி மற்றும் பசுவபுரம் கிராம ஊராட்சிகளிலும், 

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம்  சித்தேரி மற்றும் பொம்மிடி கிராம ஊராட்சிகளிலும் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 

இம்முகாமில் பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று வழங்குதல், வண்டல்மண் எடுக்க விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறுதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், கால்நடை நலன் பேணுதல், சிறு குறு விவசாயிகள் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்கள் விவசாய நிலங்களில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஆணை பெற விண்ணப்பம் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இம்முகாம்களில் மேற்கண்ட பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு பயனடையலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies