Type Here to Get Search Results !

காவிரி ஆற்றில் 2ஆம் நாளாக குளிக்க தடை.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசலில் செல்லவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக தடையை விதித்துள்ளது.

கர்நாடகா தமிழக காவிரி கரையோரங்களிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 12 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது இந்த நிலையில் தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுபில்  5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது இதனால் ஒகேனக்கல்லிற்க்கு  வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் தடை விதித்தது இந்த நிலையில் இன்று நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருப்பதால் தடை இரண்டாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிய தொடங்கியுள்ளனர் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக குளிக்கவும் பரிசலில் செல்லவும் தடை விதிக்கப் பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies