நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி பிரிவு சாலையை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் அமித் இடிபாடுகளில் சிக்கி சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கோவையில் இருந்து அரவை எந்திரம் ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரி நல்லம்பள்ளி அருகே புறவடை சந்திப்பில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் மணிமாறன் (30) இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்லம்பள்ளி அரகே அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை இதையடுத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்துக்குள்ளான 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)

