Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை மற்றும் சம்பளத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை  அடுத்து உள்ள பெரும்பாலை பஞ்சாயத்தில்  மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100நாள்  வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை பொதுமக்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

அதனை தொடர்ந்து இன்று பெரும்பாலை பஞ்சாயத்தில்  பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பெண்களுக்கு முறையாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என சோளிகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏரியில் அப்பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு பணியை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்வதற்காக அதிகாரிகள் முயற்சித்தும் முடியவில்லை ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்களிடம் கேட்கும் போது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் எங்களுக்கு வருடத்திற்கு 10 முதல் 15நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். அப்படி செய்கின்ற வேலைக்கும் பணம் முழுவதுமாக கிடைப்பதில்லை. இங்கு வேலை செய்யும் பணிக்குழு தலைவர் சரியாக வேலை இடத்திற்கு வருவதில்லை வேலைக்கு வராதாநபர்களுக்கு வந்த மாதிரி வருகை பதிவேட்டில் கணக்கு வைப்பது போன்ற முறைகேடான வேலைகளை செய்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் தகவல் அளித்தால் எந்த ஒரு பதிலும் கிடைப்பதில்லை மேலும் புதியதாக 100நாள் அட்டை வாங்க வேண்டும் என்றால் பணிக்குழு தலைவருக்கு 1500 ரூபாய் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அந்த பணத்திற்கு கூட இன்னும் சரியாக வேலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.  அதற்கும் பணத்தை முழுமையாக கொடுப்பதில்லை வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்துவதும் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அட்டை பெற வேண்டும் என்றாலும் ஆயிரத்து 500 ரூபாய் வரை பணிக்குழு தலைவருக்கு கொடுத்தால் மட்டுமே 100 வேலை திட்ட அட்டை பெற முடியும் என்றும் வேதனையுடன்  தெரிவிக்கின்றனர். 

மேலும் பஞ்சாயத்து மக்கள் கூறுகையில் இந்த ஊராட்சியில் உள்ள 10 கிராம மக்களில்  மூன்று கிராம மக்களுக்கு மட்டும் தொடர்ந்து 100 நாட்கள் முழுமையாக வேலை தருவதாகவும் மற்ற ஏழு கிராம மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் ஊராட்சிமன்றத் தலைவியின் இந்த பாராமுகம் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதி மற்றும் திட்டங்கள் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் 150 நாளாக அதிகரிப்பதற்காக தெரிவித்துவரும் நிலையில் 100 நாள் வேலைக்கே முழுமையாக வேலை வழங்காமல் ஏழு நாள் மட்டும் வழங்கி ஏமாற்றி வருவது அப்பகுதி பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இறுதிவரை அப்பகுதி பெண்கள் புதிய பணிக்குழு தலைவரை மாற்றும் வரை வேலை செய்யமாட்டோம் என்று வேலையை புறக்கணித்து விட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies