Type Here to Get Search Results !

பெண்ணை தாக்கிய நபர் கைது.

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகேயுள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், இவரின் மனைவி தனலட்சுமி (வயது36). இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இந்த நிலையில் உறவினரான ரமேஷ், என்பவருடன் தனலட்சுமிக்கு நெருக்கமான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த வேணுகோபால், ரமேசை தட்டி கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி ரமேஷ், தனலட்சுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்ட ரமேஷ் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த தனலட்சுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் அதியமான் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies