Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் இளைஞர் திறன் திருவிழா 03.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த படித்த வேலை வாய்பற்ற இளைஞர்கள் (ஆண்,பெண் இருபாலரும்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) இளைஞர் திறன் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (03.06.2022) அன்று நடைபெற உள்ளது.

எனவே இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 03.06.2022 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவில் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தை (தருமபுரி வட்டாரத்தை) சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ. பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண்,பெண் இருபாலரும்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies