Type Here to Get Search Results !

நல்லம்பள்ளியில் பஸ் நிலையம் திறப்பு.

நல்லம்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் உள்ளே செல்லும் வழியில் மின்சார டிரான்ஸ்பார்மர், கழிவுநீர் கால்வாய்கள் இருந்ததால் இந்த பஸ் நிலையம் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. இதனை உடனே சீரமைத்து பஸ் நிலையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பல்வேறு செய்தி தளங்களிலும்  தொடர்ந்து செய்திகள் வெளியானது. 

இதையடுத்து போக்குவரத்துக்கு தடையாக இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் மூடப்பட்டு பஸ்கள் வந்து செல்ல வசதியாக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் புதுப்பிக்கப்பட்ட நல்லம்பள்ளி பஸ் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் சென்ற பஸ்சை, கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜீவரத்தினம், கிளை மேலாளர் செல்வராஜ், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காமராசு, சோனியா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அறிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies