தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி வருவாய் கிராமம் அமானிமல்லாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள அமானிமல்லாபுரம் சமுதாயக் கூடத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.
இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார், இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக