Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அரூரில் வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

அரூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. 52 வயதான இவர் இரண்டு கால் இழந்த மாற்றுத்திறனாளி இவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து வருகிறார். 
இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பல முறை கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனடிப்படையில் அரூர் அடுத்த கீரைபட்டி இந்திரா நகரில் இருளர் காலனி பகுதியில் இவருக்கு பட்டா வழங்கப்பட்டது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பகுதியில் குடிஅமர்த்த கூடாது என தெரிவித்து கிராம மக்களே அந்த நிலத்தை அபகரித்து கோவில் கட்டியதால் வேறு இடத்தை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பின்பு அரூர் அம்பேத்கர் நகர் பகுதியிலேயே இவருக்கு இரண்டு சென்ட் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டது இதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்து அடித்தளம் அமைத்துள்ளார். 
ஒதுக்கப்பட் இடமானது அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடம் என்பதால் அரூர் அடுத்த செக்காம்பட்டி கிராமத்தில் இவருக்கு வேறுரொரு இடமும் வழங்கப்பட்டது. அதற்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என தெரிவித்து தனக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்கவேண்டும் எனவும் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறேன் என தெரிவித்து  அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884