Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி அடுத்த கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தில் வேடியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

தருமபுரி மாவட்டம் ஈசல்பட்டியை அடுத்த கூன்மாரிக்கொட்டாயில் அமைந்துள்ள வேடியப்பன்(சிவன்)  கோவில் பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வந்தது. இந்த கோவிலில் விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 4-ம் தேதி முதல் கோவில் கும்பாபிஷேகம் தொடங்கியது. 

இதில் முதல் நாள் கங்கணம் கட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்நுது 6-ம்  தேதி 108 புனித நீர்க்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.  பின்னர் யாகசாலை பூஜைகள், கோபுர கலசம் நிறுவுதல் மற்றும் வேடியப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசம் மற்றும் சாமிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்கார சேவை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இன்று சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884