Type Here to Get Search Results !

நேருக்கு நேர் பைக் மோதி இருவர் பலி.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா, கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள்(65) இவரது மகள் குமாரதி(40) இவரது மகன் சந்தோஷ்(19) மூவரும் அரூர் அருகே செல்லம்பட்டி புதூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு பைக்கில் வந்தனர். பைக்கை சந்தோஷ் ஓட்டி வந்தார். திருவிழா முடிந்து இன்று மாலை சொந்த ஊருக்கு மூவரும் திரும்பி பைக்கில் சென்றனர். 

அப்பொழுது பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜி என்பவர்  பைக்கில் அரூர் நோக்கி வந்தபோது அல்லாலம்பட்டி அருகே பைக் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே சின்னம்மாள், சந்தோஷ் உயிரிழந்தனர். தகவலின்பேரில் அரூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால்  தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகன், அம்மா தன் கண்ணெதிரே விபத்தில் இறந்ததை சொல்லி  மருத்துவமனையில் குமாரதி கதறி அழுதது சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies