விருதுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமர்பித்தல் வேண்டும். இது தவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்)/ ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கு மாநில முதலமைச்சர் விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுக்கு ரூ.10000/-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவதாகவும், விருதுக்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் . இத்திட்டத்தின்படி 2021- 22 ஆண்டிற்கான (காலம் 01.04.2018 முதல் 31.03.2021) முதலமைச்சர் மாநில விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, இரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும் இவ்விருது வழங்கப்படும். விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை உரிய சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல்கள் ஒலிம்பிக் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள், உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுதோறும்) ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்து தேசிய வாகையர் போட்டிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
அழைப்பு போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும், அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.
2021-2022 ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 01.04.2018 முதல் 31.03.2021 முடிய தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.06.2022க்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 600 003 அவர்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்கள், விளையாட்டு புரவலர்கள், நன்கொடையாளர்கள், நடுவர்கள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

