Type Here to Get Search Results !

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் உட்கோட்டத்திற்குட்பட்ட புலிக்கரை, பாலக்கோடு, வெள்ளி சந்தை, மாரண்டஅள்ளி ஆகிய பிர்காவில் உள்ள 33 வி.ஏ.ஒ க்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் வி.ஏ.ஒ க்களுக்கான 7 நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய தாசில்தார் ராஜசேகரன் தமிழகத்தில் பத்திரப் பதிவு முடிந்தபின், சம்பந்தப்பட்ட தகவல், சார் - பதிவாளர் அலுவலகம் வாயிலாக, வருவாய் துறைக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின், சொத்து வாங்கியவர், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தை அணுகி, பட்டா பெயர் மாறுதல் பெற வேண்டும். இதில், ஒரு நிலத்தை முழுமையாக வாங்கும்போது, கணினி வழியே பட்டா பெயர் மாற்றப்பட்டு, புதிய எண்ணுடன் புதிய பட்டா வழங்கப்படும். 

நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்குவோர், தனக்கான பாகத்தை உட்பிரிவு செய்து, அதற்கான சர்வே எண் பெற வேண்டும். இதன் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றப்படும்.உட்பிரிவு செய்து, புதிய சர்வே எண் அடிப்படையில் வழங்கப்படும் பட்டாவில், புதிய வரிசை எண் இருக்கும். மீதமுள்ள நிலத்தின் பட்டாவுக்கும், புதிய எண், கணினி வாயிலாக ஒதுக்கப்படுகிறது.

இதில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கினார், மேலும் பட்டா, உட்பிரிவு போன்றவற்றை காலதாமதமின்றி உடனடியாக செய்து தர ஆலோசனை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies