Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை - மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  இன்று (18.05.2022) காலை 6.00 மணி நிலவரப்படி சுமார் 20,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றின் எந்தவொரு பகுதிக்கும் செல்லவோ ஆற்றில் இறங்கி குளிக்கவோ, அருவியில் குளிக்கவோ ஆற்றை கடக்கவோ,  ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ மற்றும் படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ இன்று.(18.05.2022) புதன்கிழமை காலை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884