இதனால் காவல் குடியிருப்பு பகுதி வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது. குடியிருப்பில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கும் சாக்கடையால் இங்கு உள்ள குழந்தைகள் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் செய்தி அனைத்தையும் பல முறை நகராட்சிக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
தர்மபுரி மாவட்ட இரயில்வே காவலர்கள் அனைவரும் 6 மாதத்திற்க்கு ஒரு முறை ₹1250 தொழில் வரி செலுத்திவருகின்றனர், ஆண்டுக்கு சுமார் ₹60,000 தொழில் வரியாக இரயில்வே காவலர்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் வசூல் செய்கிறது.
நகராட்சி நிர்வாகம் இரயில்வே காவலர் குடியிருப்பு பகுதியில் எந்த ஒரு அடிப்படை பணியை சரியாக செய்வதில்லை என்றும், அவர்கள் கடமையை செய்ய தவரிவிட்டதாகவும், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் மிகவும் வருத்தத்துடன், மிகுந்த எதிர்பார்ப்புடன் இதற்கான தீர்வு கிடைக்குமென்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக