இதனை தொடர்ந்து கந்தகவுண்டனூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிரிட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த 250க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து வாழைத்தார்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தன.
இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது இயற்கை பேரிடரால் 60 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் கடத்தூர் பகுதிகளில் வாழை பயிர்களுக்கு வேளாண் துறை அதிகாரிகள் பயிர் காப்பீடு செய்ய மறுப்பதாகவும், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் பயிரிட படும் வாழை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்து தர வேண்டியும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து வேளாண்மை துறையினர் முறையாக ஆய்வு நடத்தி சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக