Type Here to Get Search Results !

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி 13-05-2022 காலை 10 மணி அளவில் கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு விழா நடைபெற்றது, தருமபுரி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். 

கல்லூரியின் முதல்வர் முனைவர் ப,கி, கிள்ளிவளவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் ஒலிம்பிக் கொடியினை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார், கல்லூரி முதல்வர் அவர்கள் கல்லூரி விளையாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

போட்டிகள் நிறைவு பெற்றதும் பல்வேறு தடகள மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தகுதி சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை பரிசு பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.கலைச்செல்வன் அவர்கள் வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.

மேலும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுப்பொருள் வழங்கப்பட்டது, விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன், அவர்கள் செய்திருந்தார்.

மாணவ விளையாட்டு செயலர் செல்வி கே காவியா 3 ஆம் ஆண்டு கணிதத் துறை மாணவி நன்றியுரையாற்றினார், முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 400. மீட்டர் ஓடுகள பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies