காட்டு யனை உயிரிழிந்த விவகாரம் வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

காட்டு யனை உயிரிழிந்த விவகாரம் வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட்.

மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டி என்ற கிராமத்தில், விவசாயி சீனிவாசன் என்பவர் அவருடைய நெல்வயலில்  அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று கடந்த 13 ம்தேதி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது, இந்த விவகாரத்தில் காட்டு யானையை பாதுகாக்கும் பணியினை சிறப்பாக செய்யாதது, மின்வேலி அமைத்திருப்பதை கவனித்து நடவடிக்கை எடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காக பாலக்கோடு ரேஞ்சர் 1. செல்வம் 2. பாரஸ்ட்டர் கணபதி 3. காப்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்து தருமபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார், மேலும் யானை உயிரிழிக்க காரணமான விவசாயி சீனிவாசனை மாரண்டஅள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad