Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தேசியக் கருத்தரங்கம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மல்லுபட்டி, 13 மே 2022 வெள்ளிக்கிழமை ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதுகலைத் தமிழ்த் துறையில் காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் மகளிர் என்ற பொருண்மையில் நடத்திய தேசிய கருத்தரங்கம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. கருத்தரங்கைத்  தாளாளர், சிறப்பு விருந்தினர்கள், ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்.  வரவேற்புரையை இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கா. காந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

இந்நிகழ்ச்சியின் தலைமை உரையாகக் கல்லூரியின் தாளாளர் மூகாம்பிகை திரு கு. கோவிந்தராஜ் அவர்கள் தமிழ்த் துறை நடத்தும் கருத்தரங்கு பண்பாட்டின் அடிப்படையில் இலக்கியங்கள் மூலம் ஏராளமான கருத்துக்கள் வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளதை அனைவராலும் உணரக்கூடிய வகையில் இருக்கின்றன. உங்கள் வாழ்வில் உன்னதமான இந்நிகழ்வுகளைக் கற்றுக்கொள்வதற்குத் தமிழ் இலக்கியங்கள் உங்களைப் பெருமைப்படுத்தும் என்பதே இவ்விழாவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது இன்று கூறினார்.

இக்கருத்தரங்கின் வாழ்த்துரையாகக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் திரு செ. உதயகுமார் அவர்கள் மாணவிகள் தமிழ் இலக்கியங்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய கருத்துரைகள் ஏராளமாகப் பொதிந்துள்ளன. அந்த கருத்துரைகளை அக்கால முதல் இக்கால கவிஞர்கள் வரை பாடல்களாக மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் படிக்காத பாமரனும் திரைப்படப் பாடல்கள் மூலம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டனர் என்பதை இன்று என்னால் உணர முடிகிறது. இலக்கியங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு இருந்தாலும் இன்றும் நவீனக் காலத்திற்கு ஏற்றவாறு கருத்துரைகள் மிகுந்து காணப்பட்டுள்ளன இன்று தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசு நடத்துப்போட்டி தேர்வுகளில் பணி தகுதித்தேர்வு தமிழ் இலக்கியம் வைத்திருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதனைச் சிறந்த முறையில் படித்து வாழ்வில் முன்னேற மாணவிகளுக்கு வாழ்த்துக்களைக் கூறினார். மேலும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் த.இரகுநாதன் அவர்கள் கருத்தரங்கம் மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் மிகச்சிறப்பான வல்லுநர்களை அழைத்து ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது இதுபோன்ற தேசிய கருத்தரங்குகள் தமிழ் இலக்கியங்களில் நுட்பமான சிந்தனைகளை உங்கள் மனதிலே பதிய வைக்கிறது. 
இவ்வாறான  நிகழ்வுகள் மேலும் உங்கள் வளர்ச்சிக்கான சிறப்புகளை வழிகாட்டும் விதமாக  அமையும். அறிவு சார்ந்த கருத்துரைகளைக் கேட்டு பல்வேறு வெற்றிகளை எதிர்காலத்தில் நீங்கள் பெறவேண்டும் இதுபோன்ற வல்லுநர்களை வைத்து மேலும் பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்பதே துறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திப்  பேசினார். 

முதல் அமர்வில் வாணியம்பாடி இஸ்லாமியத் தன்னாட்சி கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் பா.சிவராஜ் அவர்கள் சங்க இலக்கியங்களில் வீரமகளிர் என்ற தலைப்பிலே சங்க இலக்கியங்களில் உள்ள பல்வேறு பெண்பாற் புலவர்களின் சிறப்புகளையும் அவர்களின் தனித்தன்மையையும் வாழ்க்கையின் இனிமையையும் சுட்டிக்காட்டிக் குறிப்பாக ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், தகடூர் அதியமான்  அவைக்களப் புலவர் அவ்வையார் வரை நாற்பத்தி ஒரு புலவர்களின் மாண்புகளையும் செம்மொழி இலக்கியங்களையும் தனித் தன்மைகளையும் எடுத்துக்கூறி மாணவிகளுக்கு வீரம் சார்ந்த நிகழ்வுகளை விளக்கிக் கூறினார் மேலும் தமிழ் இலக்கியங்களைக் கற்றால் இன்று நாடு அளவில் பெரிதும் போற்றக் கூடிய இந்திய அரசுப் பணி மற்றும் மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் முழுமையான வெற்றியடைவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று சிறப்புரையாற்றினார். 

இரண்டாவது அமர்வில் ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழக தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையின் பேராசிரியர் முனைவர் த. விஷ்ணு குமாரன் அவர்கள் காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் மகளிர் என்ற தலைப்பில் நவீனக்கால இலக்கியங்கள் கூறும் பல்வேறு படைப்பாளர்கள் தன்னுடைய படைப்புகளில் பெண்களின் தனிச் சிறப்புகளையும் சமூகத்தில் அக்கறையுள்ள பெண்களில் முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு பெண்கள் தற்காலத்தில் அவர்கள் வகிக்காத பதவிகள் இல்லை என்று பல்வேறு பெண் படைப்பாளர்களை வரிசைப்படுத்தியும் உதாரணங்களையும் மாணவிகளுக்குப் பயனளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார். இரண்டு அமர்வுகளிலும் மாணவிகள் சிறப்புரை வழங்கிய வல்லுநர்களிடம் கலந்துரையாடல் மூலம் பல்வேறு வினாக்களை எழுப்பி தங்களுடைய ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர்.

கருத்தரங்கின் நிறைவாக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் த.மு ஆனந்த் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் மாணவிகள் பல்வேறு துறை சார்ந்த  தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884