அக்காவுக்காக கொலை செய்த தம்பி; தருமபுரியில் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மே, 2022

அக்காவுக்காக கொலை செய்த தம்பி; தருமபுரியில் பரபரப்பு.

நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் நேற்று மாலை கிராமத்திற்கு நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் குடிபோதையில் அந்த இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கத்தி கூச்சலிட்டுள்ளார், அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து இளம்பெண்ணை காப்பாற்றி, அந்த போதை ஆசாமியை அவரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், அந்த பெண்ணை பொதுமக்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு ராஜேஷ் அந்த பெண்ண தேடி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது ராஜேஷை பார்த்த அந்த பெண்ணின் தம்பி சென்னன் ஆத்திரமடைந்து அருகிலிருந்த இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் மருத்துவமனை வளாகத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மற்றும் தருமபுரி நகர காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து கொலையாளி சென்னனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.