தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடு தாரர்களுக்கு 30.05.2022 மற்றும் 31.05.2022 ஆகிய நாட்களில் விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் நடைபெறவுள்ள விற்பனை பத்திரம் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு, அனைத்து ஆவணங்களுடன், வாரிய விதிமுறைகளை பின்பற்றி இந்த அரிய வாய்ப்பை ஒதுக்கீடுதாரர்கள் பயன்படுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

.jpg)