அரூர் அருகே முதியவரை வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 பேர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மே, 2022

அரூர் அருகே முதியவரை வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 பேர்.

அரூர் அருகே ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி(65) இவர் தனது இருசக்கர வாகனத்தில்  அரூர் மஜித்தெருவில் நகைகடை நடத்தி வரும் தனது மூத்தமகன் அமுதரசன்  வீட்டிலிருந்து  நேற்று இரவு தனது சொந்த ஊரான ஈட்டியம்பட்டிக்கு சென்றுள்ளார் காரில் அவரது இருமகன்கள் சென்றுள்ளனர் துரைசாமி மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அரூர் ஈட்டியம்பட்டி செல்லும் சாலையில்  குப்பை கிடங்கு அருகே மூன்று பேர் வழிமறித்து அவரகள் மறைத்து வைத்திருந்த  கொடுவாளால் துரைசாமி மீது தலை நெற்றியில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு  சென்றுவிட்டனர்.

இது குறித்து காரில் சென்ற தனது மகன் பூவரசனுக்கு  துரைசாமி  தகவல் தெரிவித்துள்ளார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவரது மகன் தனது தந்தையை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் 

இதே போல் இருநாட்களுக்கு முன்னர் செல்லம்பட்டி பிரிவு ரோட்டில் ஒருவரை அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்ப ஏற்பட்டது .இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.